Saturday 21 March 2015

புதுச்சேரி பி.எஸ்.என்.எல்.லில் மகளிர் தின விழா

மகளிர் தின விழா நேற்று 21.03.2015 பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் தோழியர்.இராசேசுவரி தலைமை தாங்கினார். தோழியர்.வை.கண்ணம்மாள் வரவேற்புரை நிகழ்த்தினார். தோழியர்.சுகந்தி மாநிலச் செயலாளர் அனைத்திந்திய மாதர் சங்கம் தமிழ் மாநிலம் சிறப்புரையாற்றினார். திருமதி.உஷா நன்றி கூறினார்.
தோழியர். சுகந்தி தனது உரையில் இன்று பெண்கள் சந்தித்து வரும் பல்வேறு பாலியல் துன்புறுத்தல் குறித்துப் பேசினார். காரைக்காள் வினோதினி ஆசிட் வீச்சு பிரச்சினையில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் அதிகமான நிதியுதவி செய்ததை நன்றியோடு நினைவு கூர்ந்தார். நிர்பயா பிரச்சினையில் அந்தப் பெண் வன்புணர்வு செய்த இளைஞர்களை அண்ணா என்னை விட்டு விடுங்கள் என்று மன்றாடியிருந்தாலோ அல்லது காயத்ரி ஜபம் செய்திருந்தாலோ இந்த கொடுமை நடந்திருக்காது என்று சொன்ன போலிச் சாமியார் இரண்டொரு நாட்களிலேயே பாலியல் குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டதை சுட்டிக் காட்டினார்.