Monday 20 April 2015

பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் அதிகாரிகள் வேலைநிறுத்தம்

பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் அதிகாரிகள் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் 21.04.2015, 22.04.2015 வெற்றிகரமாக தொடங்கியது. இந்த வேலைநிறுத்தத்திற்கு மத்திய அரசின் பொறுப்பற்ற தன்மையே முழுக் காரணமாகும். தொழிற்சங்கங்கள் 5 மாதங்களுக்கு முன்னரே நோட்டீஸ் கொடுத்திருந்தும் அழைத்துப் பேசக் கூட மந்திரிமார்களுக்கு நேரமில்லை. பாவம் நாதுராம் கோட்சேவுக்கு சிலை வைக்கவும், பாலத்திற்கு கோட்சை பெயரை வைக்கவும் சிந்திக்கவும் செயல்படவும் தான் அவர்களுக்கு நேரமிருக்கிறது. பாவம் பாரதப்பிரதமர். வெளிநாடு சென்று வரவும் இலட்சக்கணக்கில் செலவு செய்து கோட் சூட் மாட்டிக் கொள்ளவும் தான் அவருக்கு நேரம் இருக்கிறது. உலகில் இருக்கிற இந்தியர்களை பார்த்ததும் அவர்களோடு போட்டோவுக்கு போஸ் கொடுத்தது போது. உள்ளூரில் இருக்கிற இந்தியர்கள் குறித்தும் கொஞ்சம் கவலை கொள்ளுங்கள் என்று தான் நாம் சொல்லுகிறோம். இல்லையென்றால் நாளை இந்தியா முழுக்க போராட்ட களமாகத் தான் மாறப் போகிறது. விவசாயிகளின் பிரச்சினை பூதாகரமாக வளர்ந்து கொண்டு வருகிறது. ரோம் நாட்டு மன்னன் போல பிடில் வாசித்துக் கொண்டு இருக்கலாமா என்பதே நமது நியாயமான கவலை.
முன்னதாக புதுச்சேரியில் நேற்று 20.04.2015 மாலை ஊழியர்கள் பங்கேற்ற உணர்ச்சிபூர்வமான ஊர்வலம் நடைபெற்றது. அதிலிருந்து சில படங்கள் ...