Tuesday 6 October 2015

பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு போனஸ் வழங்க வேண்டும் என்று கோரி இன்று 06.09.2015 பொது மேலாளர் அலுவலகம் முன்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இணைந்த ஆர்ப்பாட்டம் .. ஆர்ப்பாட்டத்தில் என் அருமைத் தோழர் என்.கொளஞ்சியப்பன் .. எல்லோரும் இணைந்திருப்பதே ஒரு மகிழ்ச்சி தான் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் போனஸ் பெற்றது..; நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறது எங்கிற காரணத்தைச் சொல்லி கொடுக்கவே இல்லை. எல்லோரும் ஏதாவது ஒரு தொகையை போனஸ் என்று சொல்லி கொண்டு செல்லும் போது வருடம் முழுக்க உழைத்தோமே ஏன் இல்லை என்கிற கேள்வி எழுந்தது. ஒரு வகையில் தீபாவளியை எனக்குப் பிடிக்கும். இல்லையென்றால் பலர் புதுத் துணி போட மாட்டார்கள். ஒரு சந்தோஷமான அனுபவம் வாழ்க்கையில் விடுபட்டு போயிருக்கும். போனஸ் என்பது கொடுபடாத ஊதியமே என்று சொன்னது சுப்ரீம் கோர்ட்டு .. கணக்கு போட்டுப் பார்த்தால் உண்








மை புரியும்..