Thursday 28 September 2017

திரு.இரா.இராஜேந்திரன் - பி.எஸ்.என்.எல் புதுச்சேரி பணி ஓய்வு

அன்பு நண்பர் திரு.இரா.இராஜேந்திரன் – பி.எஸ்.என்.எல் புதுச்சேரி பணி ஓய்வு.
      என் அன்பிற்கினிய நண்பர் திரு.இரா.இராஜேந்திரன் (பி.எஸ்.என்.எல்-புதுச்சேரி) வருகிற 30.09.2017 அன்று பணி ஓய்வு பெறுகிறார்.
      இவரது தந்தையார் திரு.இராமசாமி சீர்காழி தாலுக்காவில் உள்ள திருவெண்காட்டில் விவசாயம் செய்து வந்தார். இவரது தாயார் திருமதி.ஜெகதம்.
      திரு.இரா.இராஜேந்திரன், நாகை மாவட்டம், சீர்காழி தாலூக்கா, திருவெண்காட்டில் 18.09.1957-ல் பிறந்தார். இவரது தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி திருவெண்காட்டில் கடந்தது. பின்னர் (பூம்புகார்) மேலையூரில் அமைந்துள்ள பூம்புகார் பேரவைக் கல்லூரியில் பி.யூ.சி. மற்றும் பி.ஏ (தத்துவம்) படித்து முடித்தார். அதனைத் தொடர்ந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ (தத்துவம்) பயின்றார். அதன் பின்னர் இந்திய அரசின் தொலைத் தொடர்புத் துறையில் 11.01.1983 அன்று பணியில் சேர்ந்தார்.
      இவருக்கு இரண்டு பெண்கள். மூத்தவர் செல்வி.சங்கீதா பி.டெக் படித்து விட்டு இன்போசிஸில் சென்னையில் பணி புரிகிறார். இளைய மகள் செல்வி.ஷீலாப்ரியா பி.டெக் படித்து விட்டு பெங்களூரிலுள்ள டெக்மஹிந்திராவில் பணி புரிகிறார். இவர் மொத்தம் 34 ஆண்டுகள் தொலைத்தொடர்புத் துறையில் பணியாற்றியுள்ளார். கொடுக்கப்பட்ட பணியினை செய்து முடிக்கும் வரையில் ஓய மாட்டார்.
      திரு.இரா.இரஜேந்திரன் அவர்களின் துணைவியார் திருமதி.கனிவதனா புதுச்சேரி அரசின் டைரக்டரேட் ஆப் அக்கவுண்ட்ஸ் அண்ட் ட்ரசரீஸ்-யில் அஸிஸ்டெண்ட்டாக பணி புரிந்து வருகிறார்.

      பலதருணங்களில் நிலைமை அறிந்து உதவி செய்யும் நல்ல உள்ளம் கொண்டவர். இவரது பணி ஓய்வுக் காலம் சிறப்பாக அமைந்திட வாழ்த்துக்கள்.