Tuesday 6 October 2015

பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு போனஸ் வழங்க வேண்டும் என்று கோரி இன்று 06.09.2015 பொது மேலாளர் அலுவலகம் முன்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இணைந்த ஆர்ப்பாட்டம் .. ஆர்ப்பாட்டத்தில் என் அருமைத் தோழர் என்.கொளஞ்சியப்பன் .. எல்லோரும் இணைந்திருப்பதே ஒரு மகிழ்ச்சி தான் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் போனஸ் பெற்றது..; நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறது எங்கிற காரணத்தைச் சொல்லி கொடுக்கவே இல்லை. எல்லோரும் ஏதாவது ஒரு தொகையை போனஸ் என்று சொல்லி கொண்டு செல்லும் போது வருடம் முழுக்க உழைத்தோமே ஏன் இல்லை என்கிற கேள்வி எழுந்தது. ஒரு வகையில் தீபாவளியை எனக்குப் பிடிக்கும். இல்லையென்றால் பலர் புதுத் துணி போட மாட்டார்கள். ஒரு சந்தோஷமான அனுபவம் வாழ்க்கையில் விடுபட்டு போயிருக்கும். போனஸ் என்பது கொடுபடாத ஊதியமே என்று சொன்னது சுப்ரீம் கோர்ட்டு .. கணக்கு போட்டுப் பார்த்தால் உண்








மை புரியும்..

Wednesday 16 September 2015

டவர்களை வளைத்து தனியே கார்ப்பரேஷன் கண்டன ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல். யில் பணிபுரியும் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை இன்று 16.09.2015 தர்ணா போராட்டம் -- தற்சமயம் பி.எஸ்.என்.எல் கையிருப்பில் உள்ள 65,000 செல் போன் டவர்களை கைப்பற்றி தனியே ஒரு கார்ப்பரேஷன் அமைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதைக் க்ண்டித்து இந்த போராட்டம் .. 
ஏற்கெனவே மத்திய அரசு தற்சமயம் பி.எஸ்.என்.எல் வசம் இருக்கும் பிராட் பேண்ட் சேவையை தனியாருக்கு தாரை வார்க்க B.B.N.L  என்றொரு கார்ப்பரேஷன் அமைத்துள்ளது. எல்லாம் தனியார் முதலாளிகளை குஷிபடுத்தத்தான். அரசு கையில் இருக்கும் வரை ஒன்றும் செய்ய முடியாது. தனியே வந்தால் அடித்து சாப்பிட்டு விடலாம் அல்லவா .. எனவே இந்த போராட்டம் ...







Wednesday 2 September 2015

புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களின் மறியல் போராட்டம் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து ...மறியல்

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து இன்று






(02.09.2015) தொலைத் தொடர்பு, வங்கி, மாநில அரசு மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், இன்ஸுரன்சு ஊழியர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் .. புதுச்சேரி மாநில அரசு ஊழியர்கள் கும்பல் கும்பலாக கைதானார்கள் ..

நாடு தழுவிய 02.09.2015 வேலை நிறுத்தம் - சில காட்சிகள்

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து இன்று(02.09.2015) தொலைத் தொடர்பு, வங்கி, மாநில அரசு மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், இன்ஸுரன்சு ஊழியர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் ..






Wednesday 12 August 2015

பி.எஸ்.என்.எல் டவர்களை தனியே பிரிக்காதே - ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் ...
தற்சமயம் அனைத்து செல் போன் டவர்களும் பி.எஸ்.என்.எல் வசம் உள்ளது. அதாவது மக்களின் வரிப்பணத்தில் உருவான சொத்து அரசுத்துறையின் கையில் பத்திரமாக உள்ளது. மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த டவர்களையெல்லாம் ஒன்று சேர்த்து டவர் கார்ப்பரேசன் ஆப் இந்தியா என்கிற ஒரு அமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்னால் தான் பி.எஸ்.என்.எல் பிராட்பேண்ட் சேவையை தனியே பிரித்து பி.பி.என்.எல் என்கிற அமைப்பை உருவாக்கியது. அதாவது பி.எஸ்.என்.எல் என்கிற அமைப்பின் கீரிம் போன்ற பகுதிகளை தனியே பிரித்து எடுத்து பி.எஸ்.என்.எல்-யை நஷ்டமாக்க முயற்சிப்பது. பின்னர் பிரித்த பகுதிகளை முதலாளிகளுக்கு கொடுத்து விடுவது என்பது தான் மோடி அரசின் திட்டம் .. இதை எதிர்த்து பி.எஸ்.என்.எல்-லில் பணிபுரியும் ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை ஒன்று திரண்டு இன்று (12.08.2015) மாலை கண்டன முழக்கம் எழுப்பினார்கள்.. புதுச்சேரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ...







Thursday 30 July 2015

அப்துல் கலாமுக்கு அஞ்சலி

புதுச்சேரி பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சார்பில் முன்னாள் பாரத ஜனாதிபதி பாரதரத்னா ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி இன்று காலை (30.07.2015) வியாழன் 11 மணிக்கு பொது மேலாளர் அலுவலகம் முன் நடைபெற்றது.  தோழர்களும், தோழியர்களும் தங்கள் அஞ்சலியை செலுத்தினர்.