Friday 25 August 2017

கடலூரில் தோழர்.இராமன் குட்டியின் உரை

தோழர்.இராமன்குட்டி (அகில இந்தியத் தலைவர் – ALL INDIA BSNL PENSIONERS WELFARE ASSOCIATION ) : கடலூரில் 23.07.2017 அன்று நடைபெற்ற BSNL பென்ஷனர் கூட்டத்தில் பேசியதிலிருந்து :
      “ நல்ல விதை போட்டால் நல்ல பலன் கிடைக்கும். இன்று அகில இந்திய அளவில் ALL INDIA BSNL PERSIONERS WELFARE ASSOCIATION-க்கு 72,000 உறுப்பினர்கள் உள்ளனர். சென்னையில் மட்டும் 2,000 உறுப்பினர்களும் எஞ்சிய தமிழகத்தில் 6,000 உறுப்பினர்களும் உள்ளனர். 20.08.2009 அன்று தொடங்கப்பட்ட இச்சங்கத்தில் இன்று இந்தியா முழுமையாக 300 செகண்டிரி ஸ்விட்சிங்க் ஏரியாவில் (SSA) கிளைகள் உள்ளன”
      “இன்று பொதுத் துறையில் பென்ஷன் மாற்றியமைப்பது என்பது கிடையாது. நம்முடைய துறையிலிருந்த பல முன்னணித் தலைவர்கள் கூட இது எப்படி சாத்தியம் என்று கேள்வி கேட்டனர். ஆனால் இன்று ஊழியர்களின் ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்படும் போது பென்ஷ்னர்களின் பென்ஷன் மாற்றமும் சாத்தியமே என்று சாதித்துக் காட்டியிருக்கிறோம். செய்ய முடியாது என்று சொன்னதை இன்று சாதித்துக் காட்டியிருக்கிறோம். ஆனால் 168 பொதுத்துறை நிறுவனங்களில் பணி ஆற்றிவிட்டு பணி ஓய்வு பெறும் போது என்ன பென்ஷன் பெறுகிறார்களோ அதைத் தான் இறுதி வரை பெறுகிறார்கள்.”
“பென்ஷனை மாற்றியமைப்பது குறித்து மத்திய அரசின் உத்திரவு எதுவும் இல்லை. 2006க்கு முன்பு 33 ஆண்டு காலம் பணி முடித்திருந்தால் மட்டுமே முழு பென்ஷன் கிடைக்கும்.  நாம் கடுமையாகப் போராடி இதை மாற்றியமைத்திருக்கிறோம்.”
“முன்னாள் ராணுவத்தினை சிவிலியன் பணி முடித்த பின்பு இரண்டு பேமிலி பென்ஷன் கிடைக்கும். ஆனால் அவர் மறைந்து விட்டால் அவர் மனைவிக்கு ஒரு பென்ஷன் தான் கிடைக்கும். இது பாராபட்சமானது என்று சொல்லி கடுமையாகப் போராடினோம். அதன் பயனாக இன்று முன்னாள் ராணுவத்தினரின் மனைவிக்கு அவர் கணவர் ராணுவத்தில் பணியாற்றியதற்கான பென்ஷன் மற்றும் சிவிலியன் ஆக பணியாற்றியதற்கான் பென்ஷன் என்று இரண்டு பென்ஷன் கிடைக்கும் ஒரு உன்னத உத்திரவினைப் பெற்று நடைமுறைப்படுத்தியிருக்கிறோம்”
      “குருவாயூர் கோவிலுக்கு அருகாமையில் உள்ள ஒரு வீட்டில் மூன்று பெண்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் மூன்று பேருமே 65 வயதைக் கடந்தவர்களர். மூன்று பேருமே கல்யாணம் ஆகாதவர்கள். அவர்கள் சாப்பாட்டிற்கே திண்டாடி வருகிறார்கள். குடியிருக்கும் வீடு மட்டும் சொந்தமானது. கோவில் அன்னதானம் வழங்கப்படும் போது பாத்திரத்தை எடுத்துச் சென்று அன்னதானத்தைப் பெற்று வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் தந்தையார் தொலைபேசி இலாக்காவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பென்ஷன் பெற்று வந்தார். அவர் காலமான பின்பு அவர் துணைவியார் குடும்ப ஓய்வூதியம் பெற்று வந்தார். அதன் மூலம் அந்த குடும்பம் வாழ்ந்தது. துணைவியாரும் காலமாகி விட்டதைத் தொடர்ந்து மூன்று பெண்களின் வாழ்க்கை இருண்டு போனது. அரசு ஊழியரும் அவர் துணைவியாரும் காலமாகி விட்டால் அவர்களுக்கு கல்யாணம் ஆகாத குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு குடும்ப பென்ஷன் உண்டு என்கிற உத்திரவினைக் கண்டுபிடித்து அந்த பெண்களிடமிருந்து மனுவினைப் பெற்று கடுமையாகப் போராடி இன்று அந்தப் பெண்களுக்கு குடும்பப் பென்ஷனைப் பெற்றுத் தந்திருக்கிறோம். அவர்கள் மகிழ்ச்சியுடன் கடிதம் போட்டிருக்கிறார்கள். சில பிரச்சினைகளின் பலன் எனக்கு கிடைக்காமல் போகலாம். என் மனைவிக்குக் கூட கிடைக்காமல் போகலாம். ஆனால் வருங்கால சந்ததிக்காக போராட வேண்டும்.”
“கோயமுத்தூரில் 94 வயதான ஒரு பென்ஷனர் இருக்கிறார். அவர் பென்ஷன் புத்தகம் ஏடு ஏடாக கிழிந்து விட்டது. அவர் கஷ்டப்பட்டு டேப் போட்டு ஒட்டி வைத்திருக்கிறார். அவரைப் பார்த்தோம். பின்னர் அவர் பணி குறித்த பதிவேடுகள் எதுவும் இல்லாத நிலையிலும் பிரச்சினையின் தன்மையினை எடுத்துக் கூறி அவரிடம் உள்ள தகவல்களின் அடிப்படையில் அவர் பென்ஷனை மாற்றியமைப்பதற்கான உத்திரவினைப் பெற்றுத் தந்துள்ளோம்.”

“என் மனைவி என்னிடம் போன் செய்து இன்று என்ன தேதி என்று கேட்டாள். 23 என்று சொன்னேன். என்ன மாதம் என்று கேட்டாள். ஆகஸ்ட் என்று சொன்னேன். இன்று என்ன விஷேஷம் என்று கேட்டாள். ஓய்வூதியர்கள் சங்க தொடக்க நாள் என்று சொன்னேன். கடுமையாக என்னை திட்டிய என் மனைவி என்னிடம் சொன்னாள் “இன்று நம் திருமண நாள்”” உண்மையான தலைவர்களின் ஈடுஇணையற்ற வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது.



No comments:

Post a Comment