Wednesday 12 February 2020

தாயகம் நோக்கி....













சென்னையில் விருப்ப ஓய்வு பெற்ற தந்தி ஊழியர்கள் சார்பில் நடைபெற்ற தாயகம் நோக்கி கூடல் விழாவில் (11.02.2020)
தோழர்.பி.எஸ்.ராமன்குட்டி அவர்கள் பேச்சின் சாராம்சம்...
"தந்தி ஊழியர்கள் மூன்றாம் பிரிவின் பொதுச் செயலாளராக பாலக்காட்டில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் நான் பொதுச் செயலாளராக 1987ல் தேர்வு செய்யப்பட்டேன். எனக்காக தனக்குக் கிடைத்த அந்த வாய்ப்பினை எனக்காக தோழர்.டி.எஸ்.ராஜன் அவர்கள் விட்டுக் கொடுத்தார். எனது பணிக்கு தமிழ்நாடு மாநில தந்தி மூன்றாம் பிரிவு ஊழியர்கள் செய்த தியாகங்களை என்னால் மறக்க முடியாது. என்னுடன் தோழர்.டி.எஸ்.ராஜன் அவர்கள் 30 நாட்கள் டெல்லியிலேயே தங்கியிருந்து எனக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தார். டெலிகிராப் மேனுக்கு போஸ்ட் மேனுக்கு இணையான ஊதியம் பெற்றுத் தந்தமைக்காக பிப்ரவரி 1998ல் அகில இந்திய சங்க அலுவலகத்துக்கு தமிழ் மாநில தந்திப் பகுதிச் சங்கங்கள் புத்ய பேக்ஸ் மெஷின் வாங்கிக் கொடுத்தனர். அதே மாதம் 1998ல் மத்திய சங்கத்துக்கு தமிழ் மாநிலச் சங்ககங்கள் கம்ப்யூட்டர் வழங்கின. கம்ப்யூட்டர் வசதி கொண்ட முதல் தொலைத் தொடர்புச் சங்கம் என்ற பெருமையினை நமது சங்கம் தட்டிச் சென்றது. என்னுடைய ஆயுதம் அர்ப்பணிப்பு உணர்வும், நேர்மையும் தான். நான் 500 தோழர்களுடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன். தந்திப் பகுதி மூன்றாம் பிரிவு ஊழியர்களின் தலைவர் திரு.ஹர்சுல்கார் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி காலமானார். அச்செய்தியினைக் கேட்ட அவரது துணைவியாரும் 24 மணி நேரத்தில் காலமானார். நான் சிறிய வயதில் கன்றுக் குட்டியை தொழுவத்திற்க்கு கொண்டு சென்ற போது நாய் கடித்ததில் வெறிநாய்க் கடி நோயால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டேன். அருகாமையில் மருத்துவமனை ஏதுவும் இல்லை. போக்குவரத்து வசதியும் இல்லை. நான் நாட்டு மருந்து சாப்பிடு நாயைப் போலக் கத்தியிருக்கிறேன். என் குடும்பத்தினர் மிகவும் பயந்து போய்விட்டார்கள். நான் பிழைத்தேன். எனக்கு அது முதல் மறு பிறவி...
               இரண்டாவதாக டெல்லியில் பணிபுரியும் போது சிக்கன்பாக்ஸ் நோயால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையில் கிடந்தேன். நமது நம்பிக்கைக்குரிய ஒரு தலைவர் என்னை வந்து பார்த்து விட்டு எங்கே தனக்கு அந்த நோய் வந்து விடுமோ என்று பயந்து சொல்லாமல் கொள்ளாமல் போய் விட்டார். எப்போது என்னை அருகிலிருந்து 12 நாட்களுக்கும் மேலாக பார்த்துக் கொண்டவர் தோழர்.சித்துசிங். 1991ல் கல்கத்தாவுக்கு அருகிலிருக்கும் டார்ஜிலிங்க் பகுதியில் கூர்க்காலாந்து பகுதியில் மிகத் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு வசிக்கும் மக்கள் ஏனைய பகுதியில் வசிப்போர்களை இந்தியர்கள் என்று கூறி புறக்கணித்தார்கள். தபால் சேவை எதுவும் கிடையாது. டெல்லி அவர்கள் இந்தியாவின் பகுதி. அவர்கள் கூர்க்காலாந்து என்று பிரிவினைபோராட்டம் நடத்தி கொண்டிருந்தார்கள். நமது சங்க இதழான டெலிகிராப் குருசேஷடரை அங்குள்ள நமது உறுப்பினர்களுக்கு கொண்டு சேர்க்க முடியவில்லை. எப்படி சங்க இதழை கொண்டு சேர்ப்பது என்று கல்கத்தாவில் கூடி யோசித்தோம். மளிகை சாமான் கொண்டு செல்ல கூர்க்கா தீவிரவாதிகள் தடை சொல்வதில்லை என்பதால் மளிகை சாமான் கொண்டு செல்லும் நமது ஊழியரின் உறவினர் லாரி மூலமாக சங்க இதழை அனுப்பி வைத்தோம்.
      பஞ்சாப்பில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வந்த காலத்தில் சிவப்புக் கொடியைக் கண்டாலே போராட்டக்காராகள் தகராறு செய்த காலத்தில் துணிந்து லூதியானாவில் நமது மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினோம். மாநாடு தொடங்கும் போது மட்டும் கொடியேந்தி கோஷம் போட்டோம். நான் டெல்லி திரும்பிய பிறகு தோழர்.ஹர்கிஷன்சிங் சுர்ஜித் (அப்போதைய சி.பி.ஐ.எம். பொதுச் செயலாளர்) என்னை கட்சி அலுவலகத்திற்கு அழைத்து கை குலுக்கி எப்படி பஞ்சாபில் மாநாட் நடத்தினீர்கள் என்று கேட்டு பாராட்டினார்.
      “தந்திப்பகுதியினைச் சேர்ந்த நாம் நாளை செய்யலாம் என்று எந்த வேலையையும் ஒத்தி வைப்பதில்லை. தந்தி ஊழியர்கள் நேர்மை, நேரந்தவறாமை ஆகியவற்றிற்கு நல்ல உதாரணம் என்று ஆணித்தரமாகச் சொல்லலாம். இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு உதாரணம் சொல்வார்கள். ஒரு தந்தி ஊழியர் வீட்டில் உள்ள ஒரு பூச்செடியில் தினமும் காலை சரியாக 4 மணிக்குப் பூக்குமாம். அதற்கு அடுத்த வீட்டில் ஒரு ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் இருந்தாராம். அவர் வீட்டிலும் அதே பூச்செடி இருந்ததாம். ஆனால் அங்கு அது காலை 5 மணிக்குத் தான் பூக்குமாம்…”
      கேரளாவில் நமது தந்திப் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஆண்டுக்கு 3 முறை கூடுகிறோம். ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15 ஆகியவையே அந்த தினங்கள். தனது நூறாவது அகவையை வருகிற ஜூன் 28 அன்று நிறைவு செய்யும் ஓய்வு பெற்ற ஊழியரை கெள்ரவிக்கப் போகிறோம்…
      “நான் வெறும் உடலாக மாறும் முன் இந்த சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.. நீங்களும் இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்யுங்கள். ஓய்வாக இருக்க வேண்டுமென எண்ணாதீர்கள்….”

1 comment:

  1. வாழ்த்துக்களுடன் , மதுரை S. சூரியன், ACS - AIBSNLPWA

    ReplyDelete