Tuesday 13 January 2015

மக்களுக்கான போராட்டம்
இன்று மாலை புதுச்சேரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கம் சார்பில் செல்போன் சிம்கார்டு தட்டுபாடின்றி பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் வைத்து ஆர்ப்பாட்டம் ..






  இன்று பொதுவாக நிலவும் ஒரு குற்றச்சாட்டு என்னவென்றால் தொழிற்சங்கங்கள் தங்களது ஊதிய உயர்வு, பஞ்சப்படி போன்ற பொருளாதார கோரிக்கைகளுக்காகத் தான் போராடுகின்றனவேயன்றி மக்கள் நலன் குறித் சிறிதும் கவலைப்படுவது கிடையாது என்பது தான்.
இக்குறை களையப்படும் போது தான் மக்களின் ஆதரவு தொழிலாளர்களுக்குக் கிடைக்கும். தொழிலாளத் தோழர்கள் யோசிப்பார்களா ?
இன்று நடந்த போராட்டம் உண்மையில் பாராட்டத்தக்கது.
இது மட்டுமல்ல பி.எஸ்.என்.எல் என்ற மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கோட்டையை தனியாருக்குத் தாரை வார்க்கப்படக்கூடாது என்பதற்கான மாபெரும் போராட்டத்தை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திலுள்ள ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் துவக்கி உள்ளனர். ஒரு கோடி கையெழுத்து பெற்று மைய அரசிடம் சமர்ப்பிப்பது தான் அந்த போராட்டம்.  மக்களுக்காக மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் சூறையாடப்பட அனுமதிக்கக் கூடாது.  வாருங்கள் கரங்களை இணைப்போம் ..

1 comment:

  1. பிரமாதம்,தொடரட்டும்..அரசிண்பிரித்தாலும் சூழ்ச்சிககெதிரான...தொழிலாளர்களைமக்களோடு இனைக்கின்ற பணி..கொளஞ்சி

    ReplyDelete