Saturday 17 January 2015

திரு.ஞா.மரியப்பிரகாசம் பணி ஓய்வு ..

திரு.ஞா.மரியபிரகாசம் பணி ஓய்வு
      நண்பர்.திரு.ஞா.மரியபிரகாசம் வருகிற 31.01.2015 முதல் பி.எஸ்.என்.எல்-யில் இருந்து பணி ஓய்வு பெறுகிறார்.
குடும்ப உறவுகள்:
      11.01.1955 அன்று புதுச்சேரியில் திரு.பி.ஞானமுத்து மற்றும் திருமதி.தனசெல்வமரி ஜோசப் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். புதுச்சேரி கவர்ன்மெண்ட் மிஷன் பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்தார். இவரது மனைவி.எம்.கரோலின். இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் பிரதீப்ராஜீக்கு திருமணமாகிவிட்டது. இவர் கோயமுத்தூரிலுள்ள ஒரு தனியார் கம்பெனியில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றுகிறார். இவரது இரண்டாவது மகன் சக்கரியாஸ் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் உதிரி பாக கம்பெனியில் பணியாற்றுகிறார். இன்னும் திருமணமாகவில்லை.
பி.எஸ்.என்.எல். பணி குறித்து :
      இவர் 1977 முதல் 1979 வரை மூன்று வருடம் தற்காலிக ஊழியராக இருந்து கோயாக்சில்  அலுவலகத்திலும், தந்தி அலுவலகத்திலும், துணைக் கோட்ட அதிகாரி அலுவலகத்திலும் வாட்டர்பாயாகவும், இரவு வாட்ச்மேன் வேலையிலும் பணிபுரிந்தார். 23.07.1980 முதல் தொலைத்தொடர்புத் துறையில் நிரந்தர ஊழியராக பணியாற்றி வருகிறார். இதுவரை 35 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
      பணி ஓய்வுக்குப்பின்னும் பி.எஸ்.என்.எல்.லில் பணி செய்ய விரும்புகிறார்.
இவர் பொதுவாக கூற விரும்பும் செய்தி :
      “இந்த பி.எஸ்.என்.எல். டிபார்ட்மெண்ட்டில் ஊதியம் வழங்குவது போல வேறெந்த துறையிலும் நிச்சயம் கிடைக்காது. 1977 மற்றும் 1979 சாதாரண ரூ.5/- ரூபாயில் தான் வேலை பார்த்தேன். மூன்று வருடமாக கஷ்டப்பட்டு உழைத்தேன். இதற்குக் காரணம் என் குடும்ப கஷ்டம் தான். அன்றைய சூழ்நிலையில் நான் அப்படியெல்லாம் கஷ்டப்பட்டதால் தான் இன்றைக்கு மன நிம்மதியான முறையில் நான் 31.01.2015 அன்று பணி ஓய்வு பெறுகிறேன்”.

      இவரது கைபேசி எண்.9486106697.  
      புதுச்சேரி பி.எஸ்.என்.எல்-லில் O.C.B பகுதியில் மிகச்சிறப்பாக சேவை செய்து வரும் இவர் வருகிற 31.01.2015 அன்று பணி ஓய்வு பெறுகிறார்.

 இவரது ஓய்வு கால வாழ்க்கை சிறப்பாக அமைந்திட வாழ்த்துவோம்.
(உங்களது கருத்துக்களை பகிருங்கள். முடிந்தவர்கள் இதை மேம்படுத்துவது குறித்தும் குறை நிறைகளையும் எனக்கு 9443601439 என்ற எண்ணுக்கு தெரியப்படுத்துங்கள். அன்புடன் ..  கொ.இரா.இரவிச்சந்திரன்)





No comments:

Post a Comment